×

சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 13 வயது சிறுவன் உயிரிழப்பு


சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 13 வயது சிறுவன் உயிரிழந்தார். வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பாஸ்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மஞ்சுவிரட்டுக்கு வெளியே அவிழ்த்து விடப்பட்ட மாடு முட்டியதில் சிறுவன் பாஸ்கர் (13) உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தப்படும். அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போன்று இப்பகுதியில் நடத்தபப்டும் மஞ்சுவிரட்டு பிரசித்தி பெற்றது ஆகும்.

அதன்படி சிராவயலில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட காளை மாடுகள் போட்டியில் பங்கேற்றன. சீறிபாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் அடக்கினர். அதன்படி மஞ்சுவிரட்டுக்கு வெளியே அவிழ்த்து விடப்பட்ட மாடு முட்டியதில் சிறுவன் பாஸ்கர் (13) உயிரிழந்தார்.

மேலும்,காளைகள் முட்டியதில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

The post சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 13 வயது சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai district ,Chiravayal Manchu Virattu competition ,Sivagangai ,Chiravayal Manjuviratu competition ,Bhaskar ,Velayapatti ,Sivagangai District Elephant Manjuvratu Competition ,
× RELATED காய்கறி சாகுபடியில் ரசாயன உரத்தை தவிர்க்க அறிவுறுத்தல்